THF Announcement: ebooks update: 7/9/2014 *நெடுந்தொகை ஆகிய அக நானூறு வசனம்*

0 மறுமொழிகள்


வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது.

நூல்:  நெடுந்தொகை ஆகிய அக நானூறு வசனம்
ஆசிரியர்: பண்டிட் ந.சி.கந்தையா பிள்ளை (யாழ்ப்பாணம், இலங்கை)
பதிப்பு: தமிழ் நிலையம், நவாலியர், இலங்கை

நூல் வெளிவந்த ஆண்டு: 1938

நூல் குறிப்பு:   
இந்தச் நூல் சங்க இலக்கியமான அகனானுறு பாடல்களை எளிமையாக விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் தமிழறிஞர் ந.சி.கந்தையா பிள்ளையவர்களின் இலக்கியக் கொடைகளில் ஒன்று என்றும் குறிப்பிடலாம்.

இந்த நூலை தொகுப்பித்தார்  கானப் பேரெயில் எறிந்த பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. தொகுப்பித்தவர் உப்பூரி குடிக் கிழார் மகனார் உருத்திரசன்மனார். ஆக இந்த நூல் தொகுப்பித்த காலம் கி.பி.50 என அறியலாம். இந்த நூலுக்குக் கடவுள் வாழ்த்து எழுதியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். 400 செய்யுள்கள் கொண்ட அக நானூறு தொகுப்பில் உள்ள பாடல்களைப் பாடியோர் ஏறக்குறையை 143 பேர். ஒரு சில பாடல்களின் ஆசிரியர் பெயர் காணக் கிடைக்கவில்லை.


இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.தென்கொங்கு சதாசிவம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 393

நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.தென்கொங்கு சதாசிவம்

நூலை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​

மறுமொழிகள்

0 comments to "THF Announcement: ebooks update: 7/9/2014 *நெடுந்தொகை ஆகிய அக நானூறு வசனம்*"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES