THF Announcement: ebooks update: 22/June/2013 *திருவிடைக்கழிமுருகர் பிள்ளைத்தமிழ்*

1 மறுமொழிகள்

வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட பதிக நூல்:

திருவிடைக்கழிமுருகர்  பிள்ளைத்தமிழ்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 324

நூலை வாசிக்க!


நூல் மின்னாக்கம்: முனைவர். சுபாஷிணி, பரந்தாமன்
மின்னூலாக்கம்: முனைவர். சுபாஷிணி


திருவாவடுதுறை மடத்தின் உட்பகுதி மண்டபத்தில் உள்ள திருநாவுக்கரசர் சிற்பம்.


அன்புடன்
முனைவர். சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

மறுமொழிகள்

1 comments to "THF Announcement: ebooks update: 22/June/2013 *திருவிடைக்கழிமுருகர் பிள்ளைத்தமிழ்*"

Unknown said...
June 22, 2013 at 10:51 PM

அன்புமிகு சுபாஷிணி ட்ரெம்மல் அவர்களுக்கு

தமிழ் மரபு அறக்கட்டளை மூலம் மின்னாக்கம் செய்யப்பட்ட இந்நூல் "தமிழ்ச்செய்யுளியலுக்கு"ஒரு விண்முக பல்கலைக்கழகம் ஆகும்(CYBER UNIVERSITY). இத்தமிழ்ப்பணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

தமிழ்ச்செம்மல் உ.வே.சா வைப் பற்றி பெருமை கொள்ளும்போது
அவர் ஒரு பெரிய தமிழ்க்கடல் அருகே நின்று வாங்கிய "கடற்கரைக்காற்று"எப்படி வீசியிருக்கும் என் நான் கற்பனை செய்திருக்கிறேன்.இப்போது சில பக்கங்கள் தான் வாசித்தேன்.அஞ்சுடர்த்தமிழை அறுசீர் எண்சீர் என்று கழிநெடில் அடிகளில்
பொற்சங்கிலி கோர்த்தது போல் அலை அலையாய் பொங்கி எழுதியிருக்கிறார்.அந்த இறை இலக்கியம் முருகியல் தெய்வம் மழலையாய் இழைந்து வருவதை அருமையாய் வெளிப்படுத்துகிறது.சப்பாணி பருவத்தில்
பன்னிரெண்டு கை கொண்டு சப்பாணி கொட்டும் "பிள்ளைத்தமிழ்"வரிகளை
மனப்படம் இயக்கிப்பார்த்த போது திருச்சீர் அலைவாய் (திருச்செந்தூர்)முருகனின்"விஸ்வரூபம்"கண்முன் விரிந்தது.

உங்களது இந்த அரிய சிறந்த தமிழ்ப்பணிக்கு என் பாராட்டுகள்

அன்புடன் ருத்ரா

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES