திருப்பாவை - 17

0 மறுமொழிகள்

திருப்பாவை - 17

கதவு திறந்திடவும், கோபியர் உள்ளே சென்று, நந்த கோபனையும், யசோதையையும், பலதேவரையும் சயனத்திலிருந்து எழுப்புதல்

ராகம் கல்யாணி, ஆதி தாளம்.



அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்;
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்;
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.

தூணி, தண்ணீர், சோறு இவற்றை தானம் செய்யும் எங்கள்
எசமானான நந்தகோபாலரே எழுந்திருக்கவேண்டும்!
வஞ்சிக் கொடிக்கு கொழுந்து போல் முதன்மையானவளே!
எங்கள் குலவிளக்கே ; எசமானியான யசோதையே! விழித்துக்கொள்
வானளாவிய ஓங்கி வளர்ந்த அனைத்துலகங்களையும்
அளந்த தேவர்களுக்கெல்லாம் தலைவனே எழுந்திரு
பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழலை அணிந்த
பலராமா நீயும் உன் தம்பியான கண்ணனும் எழுந்திருக்கவேண்டும்

Thiruppavai - 17
Raga : Kalyani, Adi

O king Nandagopala who gives food, water and shelter wake up
O queen Yasodha, the foremost scion among women of sterling character
the beacon light please rise up
O lord of gods ! the one who grew up and pierced through the space
and measured all the worlds!
O prince Balarama the one who adorned with gold anklets! may your
younger brother and yourself get up from your sleep\\

[ Picture shows Andal and her friends go to the chambers of Nandagopala, the father, Yasodha the mother and Baladeva the brother of Krishna and wake them before addressing Krishna himself directly ]






திரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி
திருப்பாவை உபன்யாசம்
நாள்: 16.12.2008 முதல் 14.01.2009 வரை
நேரம்: காலை 7.00 மணியளவில்
இடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033

இன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்
நன்றி :
தேசிகன் வீடு
குமுதம் வெப் டிவி

மறுமொழிகள்

0 comments to "திருப்பாவை - 17"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES